B.A. Tamil

நோக்கம்:

நமது கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகளுக்குத் தமிழ் இலக்கியத்தின் நன்மதிப்பையும் மொழி அறிவினையும் இலக்கிய, இலக்கணங்கள் அறிவுறுத்தும் வாழ்வியல் முறைகளையும் திறம்பட கற்பித்து மாணவிகளின் ஆளுமைத்திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.


குறிக்கோள்:

மேற்காண் நோக்கத்திற்கிணங்க தமிழ்த்துறையானது மாணவிகளின் முழுத்திறன்களை வெளிக்கொணர ஏற்ற சூழலை உருவாக்கித்தருதல்.

நமது பண்பாடு, கலாச்சாரம், மற்றும் பாரம்பரியம், சமூக பொறுப்புணர்வுகளோடு நன்மை தீமைகளை எடுத்துரைத்து மாணவிகளை வழிநடத்துதல்.

மாணவிகளின் மனதில் நேர்மறையான சிந்தனைகளை விதைத்து சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு ஊக்குவித்தல்.